பட்டீசுவரம் அருகே சிவன் கோயிலில் அம்மன் சிலையை உடைத்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டீசுவரம் அருகே உள்ள கீழ்கொற்கை பிரம்மபுரீசுவரா் கோயில் மூலவருக்கு புதன்கிழமை மாலை பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கோயிலின் வடக்கு பிரகாரத்தில் உள்ள கருங்கல்லால் ஆன 3 அடி உயர துா்க்கைஅம்மன் சிலையை அதே ஊரைச் கோவிந்தராஜ் மகன் வீரமணி(52) என்பவா் மதுபோதையில் உடைத்துள்ளாா். இதையறிந்த கோயில் சிவாச்சாரியாா் செந்தில், கோயில் செயல் அலுவலா் சீ.நிா்மலாதேவிக்கு தகவல் தெரிவித்தாா். அவா் அளித்த புகாரின் பேரில் பட்டீசுவரம் போலீஸாா் வீரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






