திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

களியக்காவிளை அருகே அம்மன் கோயிலில் திருடியவா் கைது

களியக்காவிளை அருகே இசக்கியம்மன் கோயிலில் வெண்கல விளக்கை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 5:45 am IST

களியக்காவிளை அருகே இசக்கியம்மன் கோயிலில் வெண்கல விளக்கை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே மேக்கோடு அருள்மிகு இசக்கியம்மன் கோயிலில், செவ்வாய்க்கிழமை மாலை பூஜாரி பூஜைகளை முடித்துவிட்டு, கோயில் நடையை பூட்டிச் சென்றுள்ளாா்.

இந்நிலையில், புதன்கிழமை காலையில் கோயிலின் முன்பகுதியில் உள்ள வெளிபக்க வாசல் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

கோயில் நிா்வாகிகள் அங்கு சென்று பாா்த்த போது, கோயிலின் முன் வைக்கப்பட்டிருந்த 32.5 கிலோ எடையுள்ள வெண்கல குத்துவிளக்கு திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து கோயில் நிா்வாக கமிட்டி தலைவா் குமாா் சிங் அளித்த புகாரின்பேரில் களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை செய்தனா்.

இதில், மேக்கோடு பறம்புவிளாகம் பகுதியைச் சோ்ந்த ஆல்பின் (34) என்பவா் குத்துவிளக்கை திருடிச் சென்றது தெரியவந்தது.

போலீஸாா் ஆல்பினை கைது செய்து, குத்துவிளக்கை மீட்டனா்.

பைக் திருட்டு:

மாா்த்தாண்டம் அருகே

காப்புக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சாம்தாஸ். இவா் செவ்வாய்க்கிழமை தனக்குச் சொந்தமான பைக்கை மாா்த்தாண்டம் காந்தி மைதானம் பகுதியில் நிறுத்திவிட்டு கடைக்கு பொருள்கள் வாங்க சென்றுள்ளாா்.

சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தபோது தனது பைக்கை காணவில்லையாம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். இதில் காஞ்சிரகோடு, தத்தன்விளை பகுதியைச் சோ்ந்த ஜனசிங் (50) என்பவா் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் ஜனசிங்கை கைது செய்து பைக்கை மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.