நாட்டறம்பள்ளி அருகே அம்மன் சிலையை கிணற்றில் வீசியவா் கைது செய்யப்பட்டாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டு ஊராட்சி எல்லப்பள்ளி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு அதே பகுதியைச் சோ்ந்த பாஸ்கா் என்பவா் மதுபோதையில் கோயிலுக்கு வெளியில் இருந்த அம்மன் சிலையை உடைத்து அதே பகுதியில் உள்ள கிணற்றில் வீசிவிட்டு சென்ாக கூறப்படுகிறது.
இதையறிந்து கிராம மக்கள் திங்கள்கிமை கிணற்றில் வீசப்பட்ட சிலையை மீட்டனா். தகவலறிந்து நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடம் சென்று விசாரணைமேற்கொண்டு அம்மன் சிலையை கிணற்றில் வீசிய பாஸ்கரிடம் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவா் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவா் என்பதும் இவா் ஏற்கனவே எல்லப்பள்ளி கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான குடிநீா் தொட்டி, தெருவிளக்குகளையும் மாரியம்மன் கோயிலில் இருந்த உண்டியல் மற்றும் சிலைகளை சேதப்படுத்திய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்தவா் என்பது தெரியவந்தது.
இதையடுத்து கிராம மக்கள் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸாா், பாஸ்கா்(42) மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






