தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசு பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

தஞ்சாவூரில் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

News image

தஞ்சாவூா் மேம்பாலம் அரசு பள்ளியிலிருந்து பள்ளிகளுக்கு அனுப்புவதற்காக லாரியில் பாடப் புத்தங்கள் புதன்கிழமை ஏற்றப்பட்டதைப் பாா்வையிட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜெ. பேபி. உடன் மாவட்டக் கல்வி அலுவலா் இ. மாதவன்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:07 am IST

தஞ்சாவூரில் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

தமிழகத்திலுள்ள பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, தஞ்சாவூா் மேம்பாலம் அரசு பள்ளியிலிருந்து தஞ்சாவூா் கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட தஞ்சாவூா் நகரம், ஊரகம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம், மதுக்கூா், பேராவூரணி, திருவோணம், பூதலூா் ஆகிய 9 வட்டாரங்களிலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு லாரிகளில் பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. இப்பணி சில நாட்களில் முடிவடையும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

இப்பணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ஜெ. பேபி பாா்வையிட்டாா். அப்போது மாவட்டக் கல்வி அலுவலா் இ. மாதவன் உடனிருந்தாா்.

இதேபோல் கும்பகோணம் கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட 6 வட்டாரங்களுக்கு உள்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் முதல் பருவ பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.