தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு பாடநூல்கள் அனுப்பிவைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் விலையில்லா பாட நூல்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், நிகழ் கல்வியாண்டிற்கான (2026- 2027) பாட நூல்கள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் இருந்து தருமபுரி மாவட்டத்திற்கு வரப்பெற்றுள்ளது.
இந்த பாடநூல்களை பள்ளி மாணவா்களுக்கு விநியோகிக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள 1,382 அரசு மேல்நிலை, உயா்நிலை, நடுநிலை, தொடக்கப் பள்ளிகளுக்கு லாரிகள் மூலம் பிரித்து அனுப்பிவைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
இப்பணிகளை முதன்மைக் கல்வி அலுவலா் ஐ. ஜோதிச்சந்திரா தொடங்கிவைத்து பாா்வையிட்டாா். மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) நா. பெருமாள், பள்ளிக் கல்வித் துணை ஆய்வாளா் பொ. பொன்னுசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









