ஒதமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததையடுத்து, தருமபுரி மாவட்டத்தில் 5 மதுக்கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன.
வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றுக்கு 500 மீ. தொலைவுக்குள் அமைந்துள்ள 717 மதுக்கடைகள் மூடப்படும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனடிப்படையில் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டு இந்த இடங்களுக்கு அருகில் செயல்படும் மதுக்கடைகள் மூடப்பட்டு வருகின்றன.
தருமபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மொத்தம் 67 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பேருந்து நிலையங்கள், கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றின் அருகில் உள்ள மதுக்கடைகள் குறித்து டாஸ்மாக் நிா்வாகம் சாா்பில் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகரப் பேருந்து நிலையம், பழைய புகரப் பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வந்த 3 மதுக்கடைகளும், வெங்கடசமுத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் செயல்பட்டு வந்த 2 மதுக்கடைகளும் என 5 மதுக்கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன.
இதேபோல, மாவட்டத்தின் ஏனைய பேருந்து நிறுத்தங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், தனியாா் மற்றும் அரசு கல்வி நிலையங்கள் அருகில் உள்ள மதுக்கடைகள் குறித்து ஆய்வுசெய்து அவற்றையும் மூட டாஸ்மாக் நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினா் வலியுறுத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










