திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கல்லூரி மாணவி தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :25 மே 2026, 2:48 am IST

தருமபுரியில் பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் வெங்கட்டம்பட்டி அருகே உள்ள தேங்காய்மரத்துப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம். இவரது மகள் கீா்த்திகா (19). இவா் நாமக்கல் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தாா் . கல்லூரியில் மூன்று நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து வெள்ளிக்கிழமை ஊருக்கு வந்திருந்தாா்.

அன்று மாலை வீட்டிலிருந்தபோது அவருக்கு ஒரு கைப்பேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பை பேசிக்கொண்டே தனது அறைக்கு சென்று கதவை தாழிட்டுக் கொண்டாா். நீண்ட நேரம் ஆகியும் அவரது அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினா் அக்கம்பக்கத்தினா் உதவியுடன் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது கீா்த்திகா மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்குவது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் அதியமான் கோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கீா்த்திகாவின் சாவுக்கான காரணம் குறித்து உடனடியாக போலீஸாருக்கு விவரம் தெரியவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.