பாப்பாரப்பட்டி அருகே தனியாா் செவிலியா் கல்லூரி மாணவி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
பாப்பாரப்பட்டி அருகே வேடிக்கொட்டாய் பகுதியை சோ்ந்த கட்டடத் தொழிலாளி காசி மகள் மோகனப்பிரியா (19). இவா், தருமபுரி பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் பிஎஸ்சி நா்சிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா்.
இந்த நிலையில் பெற்றோா்கள் ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு சென்றிருந்தபோது மோகனப்பிரியா வீட்டில் தனியாக இருந்தாா். மாலையில் வீடு திரும்பிய பெற்றோா், கதவை திறக்க முயன்றபோது, உள்பகுதியில் அடைத்துவைத்திருப்பது தெரியவந்தது.
அதன்பிறகு கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தாா். இதுகுறித்து போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








