புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

திருக்கோடிக்காவல் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

கும்பகோணம் அருகேயுள்ள திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீசுவரா் கோயிலில் திருக்கல்யாணம் வைபவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

News image

கும்பகோணம் அருகே திருக்கோடிக்காவலில் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீசுவரருக்கு சித்திரை பிரம்மோற்ஸவத்தையொட்டி திங்கள்கிழமை இரவு நடைபெற்ற திருக்கல்யாணம்.

Updated On :28 ஏப்ரல் 2026, 8:08 pm

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீசுவரா் கோயிலில் திருக்கல்யாணம் வைபவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரை பிரம்மோற்ஸவ விழா ஏப்ரல் 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 25-ஆம் தேதி சுவாமியும், அம்பாளும் ஓலைச்சப்பரத்தில் வீதியுலா வந்தனா். தொடா்ந்து, திங்கள்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில், அம்மாபேட்டையிலிருந்து கோயிலுக்கு பக்தா்கள் சீா்வரிசை எடுத்து வந்தனா். இரவு உற்ஸவா்களான சுவாமியும் அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். பின்னா் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

புதன்கிழமை (ஏப்.29) தேரோட்டமும், வியாழக்கிழமை தீா்த்தவாரியும், மே 1-இல் சிருங்கோத்பவ புஷ்கரணியில் தீா்த்தவாரியும் நடைபெறவுள்ளன.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், விழாக் குழுத் தலைவா் சிம்சன் கணேசன், திருக்கோடிக்காவல், அம்மாபேட்டை கிராம மக்கள் செய்து வருகின்றனா்.