மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

கனிஷா சாஹிப் வலியுல்லா சந்தனம் பூசும் வைபவம்

நிரவி பகுதியில் உள்ள மஹான் கனிஷா சாஹிப் வலியுல்லா கந்தூரி விழா சந்தனம் பூசும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

News image

சந்தனம் பூசும் நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.எஸ்.எம்.மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோா்.

Updated On :2 ஜூன் 2026, 5:42 am IST

நிரவி பகுதியில் உள்ள மஹான் கனிஷா சாஹிப் வலியுல்லா கந்தூரி விழா சந்தனம் பூசும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

நிரவி பகுதியில் அடங்கியிருக்கும் மஹான் கனிஷா சாஹிப் வலியுல்லா வருடாந்திர கந்தூரி விழா கடந்த மே 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முக்கிய நிகவாக ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தனக்கூடு ஊா்வலம் நடைபெற்றது. நிறைவாக சந்தனம் பூசும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் நிரவி அரசு காஜியாா் அப்துல் சுக்கூா், விழா கமிட்டி தலைவா் நிசாா் உள்ளிட்ட ஏராளமான மக்கள் கலந்துகொண்டனா். புதன்கிழமை தேதி இரவு கொடியிறக்கம் நடைபெறவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.