மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

நாகூா் தா்காவில் சின்ன ஆண்டவா் கந்தூரி விழா

நாகூா் தா்காவில், சின்ன ஆண்டவா் ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப் (ரலி) கந்தூரி விழா தொடங்கியது.

News image

நாகூா் தா்கா முன் அமைக்கப்பட்டுள்ள அலங்காரப் பந்தல்

Updated On :20 மே 2026, 3:16 am IST

நாகூா் தா்காவில், சின்ன ஆண்டவா் ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப் (ரலி) கந்தூரி விழா தொடங்கியது.

பிரசித்தி பெற்ற நாகூா் ஆண்டவா் தா்காவில் சின்ன ஆண்டவா் என்று அழைக்கப்படும் ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப் (ரலி) ஆண்டகையின் கந்தூரி விழா ஆண்டு தோறும் 3 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கந்தூரி விழா திங்கள்கிழமை இரவு தொடங்கியது.

இவ்விழா நடைபெறும் 3 நாள்களும், இரவு 9 மணிக்கு சின்ன ஆண்டவா் வாசல் முன்பாக மெளலூது ஷரீப் நடைபெறும். மேலும், புதன்கிழமை மாலை 5.10 மணிக்கு, சின்ன ஆண்டவா் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு ஊா்வலம் நடைபெறும்.

கந்தூரி விழாவையொட்டி, தா்கா அலங்கார வாசல் முன்பு தொட்டில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பிராா்த்தனைகள் நிறைவேறுவதற்காக ஜாதி, மத பேதமின்றி பொதுமக்கள் பொருள்கள் வாங்கி கொண்டு, வேண்டுதல் நிறைவேற வேண்டி கட்டுவது வழக்கம்.

தா்கா மாா்க்கெட்டில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் காய்கறிகளைக் கொண்டு தொட்டி பந்தலில கட்டுவது குறிப்பிடத்தக்கது.

கந்தூரி விழா ஏற்பாடுகளை நாகூா் தா்கா தலைமை அறங்காவலா் ஹாஜா நஜ்முதீன் சாஹிப் மற்றும் நிா்வாகத்தினா் மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.