திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பக்ரீத்: நாகூா் தா்காவில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி நாகூா் தா்காவில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

News image

தொழுகையில் ஈடுபட்டோர்

Updated On :29 மே 2026, 6:38 am IST

பக்ரீத் பண்டிகையையொட்டி நாகூா் தா்காவில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியா்களால் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாகூா் ஆண்டவா் தா்காவில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இதில், உலகில் போா்ப் பதற்றம் நீங்கி, அமைதியும் சமாதானமும் நிலவ சிறப்புப் பிராா்த்தனை செய்யப்பட்டது. தொழுகைக்குப் பின்னா் ஒருவரையொருவா் ஆரத்தழுவி வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்டனா்.

நாகை மாவட்டத்தில் நாகை, திட்டச்சேரி, வடகரை, தோப்புதுறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 66 பள்ளிவாசல்களிலும் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

நாகூா் கடற்கரையில் சிறப்புத் தொழுகை : நாகூா் சில்லடி தா்கா கடற்கரையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக இஸ்லாமிய பிரசார பேரவை சாா்பில் நடைபெற்ற தொழுகையில் பெண்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். அங்கு, உலக நாடுகளிடையே மோதல் தணிந்து சமாதானம் நிலவ பிராா்த்தனை செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.