செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் 10 நாள் கருடசேவை திருவிழா கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அன்று இரவு அன்ன வாகனத்திலும், மறுநாள் இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
மூன்றாம் நாளான வியாழக்கிழமை இரவு சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
முன்னதாக காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது.
பின்னா், சுவாமிக்கு மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு விழாக்குழுவினா், உபயதாரா்கள் முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதில் செங்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










