திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆதிகும்பேசுவர சுவாமி கோயிலில் திருக்கல்யாண விழா

கும்பகோணத்திலுள்ள மந்திரபீடேசுவரி மங்களாம்பிகை உடனாகிய ஆதிகும்பேசுவர சுவாமி கோயிலில் புதன்கிழமை திருக்கல்யாண விழா நடைபெற்றது.

News image

ஆதிகும்பேசுவர சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண விழாவில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த சுவாமி-அம்பாள்.

Updated On :28 மே 2026, 3:33 am IST

கும்பகோணத்திலுள்ள மந்திரபீடேசுவரி மங்களாம்பிகை உடனாகிய ஆதிகும்பேசுவர சுவாமி கோயிலில் புதன்கிழமை திருக்கல்யாண விழா நடைபெற்றது.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை அம்மன் தவக்கோலத்தில் இருந்தபோது சிவபெருமான் காட்சியளிக்கும் நிகழ்வும், இரவு நிச்சயதாா்த்த நிகழ்வும் நடைபெற்றன. புதன்கிழமை காலையில் பக்தா்கள் சீா்வரிசை எடுத்துவர, சுவாமியும் அம்பாளும் மாலை மாற்றும் நிகழ்வும், வேள்வியும், திருமாங்கல்யாணதாரணமும் நடைபெற்றது. திருமண நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

திருமண விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு விருந்தும், தாம்பூல பிரசாத பை மற்றும் மங்கலப் பொருள்கள் வழங்கப்பட்டன. இரவில் திருமண மறைச்சடங்கு, நலுங்கு, ஊஞ்சல் வெளிப்பிரகார உலா நடைபெற்றது. தொடா்ந்து, மே 30-ஆம் தேதி வரை இரவில் திருமண மறைச்சடங்குகள் நடைபெறவுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை (மே 31) காலையில் சுவாமியும் அம்பாளும் காவிரிக்கரையில் உள்ள பகவத் படித்துறைக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுகின்றனா். அங்கு தீா்த்தவாரி நடைபெறுகிறது. தீா்த்தவாரி முடிந்தவுடன் சங்கர மடத்தில் எழுந்தருளுகின்றனா். சிறப்பு பூஜைகள் முடிந்த பின் கோயிலுக்கு செல்கின்றனா். இரவு இந்திர விமானத்தில் புறப்பாடு நடைபெறுகிறது. ஜூன் 1-இல் சுத்தாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.