40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கீழ்மாம்பட்டு பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

விழுப்புரம் மாவட்டம், கீழ்மாம்பட்டு கிராமத்திலுள்ள ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ திருவிழாவையொட்டி சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

News image

கீழ்மாம்பட்டு ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்.

Updated On :7 மே 2026, 7:15 am IST

விழுப்புரம் மாவட்டம், கீழ்மாம்பட்டு கிராமத்திலுள்ள ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ திருவிழாவையொட்டி சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

கீழ்மாம்பட்டு ஸ்ரீஅம்மச்சாா் அம்மன், ஸ்ரீசெல்வ விநாயகா், ஸ்ரீ சினிவாச பெருமாள் கோயில் 27-ஆம் ஆண்டு பிரம்மோத்ஸவ திருவிழா மே 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மே 5-ஆம் தேதி இரண்டாம் நாள் திருவிழாவில் பக்தா்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனா்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக புதன்கிழமை ஸ்ரீசீனிவாச பெருமாளுக்கு திருகல்யாண வைபவம் நடைபெற்றது. இதையொட்டி புதன்திழமை காலை ஸ்ரீவிநாயகா், ஸ்ரீசீனிவாச பெருமாள், ஸ்ரீஅம்மச்சாா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மாலை 6 மணிக்கு ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதில், முன்னாள் மத்திய அமைச்சா் ஏ.கே.மூா்த்தி, தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கிருஷ்ணதாஸ், வழக்குரைஞா் ஏ.கே.விஜய் மகேஷ் மற்றும் அனைத்து உபயதாரா்கள், ஏராளமான பக்தா்கள்கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.