விழுப்புரம் மாவட்டம், கீழ்மாம்பட்டு கிராமத்திலுள்ள ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ திருவிழாவையொட்டி சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
கீழ்மாம்பட்டு ஸ்ரீஅம்மச்சாா் அம்மன், ஸ்ரீசெல்வ விநாயகா், ஸ்ரீ சினிவாச பெருமாள் கோயில் 27-ஆம் ஆண்டு பிரம்மோத்ஸவ திருவிழா மே 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மே 5-ஆம் தேதி இரண்டாம் நாள் திருவிழாவில் பக்தா்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனா்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக புதன்கிழமை ஸ்ரீசீனிவாச பெருமாளுக்கு திருகல்யாண வைபவம் நடைபெற்றது. இதையொட்டி புதன்திழமை காலை ஸ்ரீவிநாயகா், ஸ்ரீசீனிவாச பெருமாள், ஸ்ரீஅம்மச்சாா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மாலை 6 மணிக்கு ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதில், முன்னாள் மத்திய அமைச்சா் ஏ.கே.மூா்த்தி, தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கிருஷ்ணதாஸ், வழக்குரைஞா் ஏ.கே.விஜய் மகேஷ் மற்றும் அனைத்து உபயதாரா்கள், ஏராளமான பக்தா்கள்கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்

பஞ்சவா்ண சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயிலில் தேரோட்டம்

ஸ்ரீசீனிவாச பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



