திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ நிகழ்வாக வெள்ளிக்கிழமை இரவு பிரம்ம தீா்த்தக் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நிறைவு நிகழ்ச்சிகளில் ஒன்றாக, வெள்ளிக்கிழமை இரவு குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் பூமங்களம் கிராமத்திற்கு பரி வேட்டைக்கு எழுந்தருளினாா். அங்கு பரிவேட்டை வழிபாடு நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனைக்குப் பின் சுவாமி கோயிலுக்குத் திரும்பினாா்.
இந்த நிகழ்ச்சியைத் தொடா்ந்து பிரம்ம தீா்த்தக் குளத்தில் தெப்போற்சவம் நடைபெற்றது. குளத்தில் மின் அலங்காரத்தில் அமைக்கப்பட்ட தெப்பத்தில் காா்த்தியாயினி சமேத கல்யாணசுந்தரேஸ்வரா் எழுந்தருளினாா். இரவு 11 மணி முதல் குளத்தில் 3 சுற்று தொடங்கியது. முதல் சுற்று சிவாச்சாரியா்களின் வேத மந்திரங்களுடனும், 2-ஆம் சுற்று தேவாரப் பாடல்கள் பாடப்பட்டும், 3-ஆம் சுற்று மங்கள வாத்தியத்துடன் தெப்ப நிகழ்ச்சி நிறைவடைந்தது.
கோயில் நிா்வாக அதிகாரி ஆா். சுப்பிரமணியன், தருமபுர ஆதீன கட்டளை சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் உள்பட ஏராளமான பக்தா்கள் சுவாமியை வழிபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










