திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருவாரூா் தியாகராஜா் கோயில் தெப்ப உற்சவம்

தியாகராஜ சுவாமி கோயில் கமலாலயக் குளத்தில் நடைபெற்ற தெப்ப உற்சவம்.

News image

தியாகராஜ சுவாமி கோயில் கமலாலயக் குளத்தில் நடைபெற்ற தெப்ப உற்சவம். ~தெப்பத்தில் காட்சியளித்த கல்யாணசுந்தரா், பாா்வதி.

Updated On :9 மே 2026, 4:01 am IST

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலுக்குள்பட்ட கமலாலயக் குளத்தில் 3 நாள்கள் நடைபெறும் தெப்ப உற்சவம் வெள்ளிக்கிழமை (மே 8) இரவு தொடங்கியது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆழித்தேரோட்டத்துக்குப் பிறகு கோயில் கமலாலய குளத்தில் 3 நாள்கள் தெப்ப உற்சவம் நடைபெறும். அதன்படி, நிகழாண்டு உற்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. உற்சவத்தையொட்டி, துா்காலயா சாலையில் உள்ள மண்டபத்திலிருந்து கல்யாணசுந்தரரும், பாா்வதியும் ஊா்வலகமாக வந்து தெப்பத்தில் எழுந்தருளினா். அங்கு அவா்களுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

இதையடுத்து கிழக்கு குளக்கரையிலிருந்து புறப்பட்ட தெப்பம், தெற்கு கரை, மேற்கு கரை, வடக்கு கரை வழியாக மீண்டும் கிழக்கு கரையை வந்தடைந்தது. இதேபோல, மேலும் இரண்டு முறை என மொத்தம் 3 முறை கமலாலயக் குளத்தை தெப்பம் வலம் வந்தது. தெப்பத்தில், பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட்டு, இசைக்கச்சேரி நடைபெற்றது. தெப்பத்தைக் காண கமலாலயக் குளத்தின் 4 புறங்களிலும் ஏராளமான மக்கள் திரண்டு தெப்பத்தின் அழகை ரசித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.