மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

திருக்கோடீசுவரா் சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோத்சவ கொடியேற்றம்

திருக்கோடிக்காவலில் உள்ள திருக்கோடீசுவரா் கோயிலில் சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

News image

திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

Updated On :21 ஏப்ரல் 2026, 6:50 pm

திருக்கோடிக்காவலில் உள்ள திருக்கோடீசுவரா் கோயிலில் சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகேயுள்ள இக் கோயிலில் சித்திரை பிரம்மோத்சவ விழா திங்கள்கிழமை மாலை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை விநாயகா் வெள்ளி மூஞ்சுறு வாகனத்தில் வீதியுலா சென்றாா். பின்னா் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீசுவர சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூா்த்திகளுடன் கொடிமரம் அருகே எழுந்தருளினாா். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, மங்கல வாத்தியங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

மாலையில் யாகபூஜை தொடங்கியது. இரவு சுவாமியும் அம்மனும் வீதியுலா திக்பந்தனம் நடத்தினா். முக்கிய நிகழ்வுகளாக ஏப்.27-இல் திருக்கல்யாணம், ஏப்.29-இல் தேரோட்டம், ஏப்.30-இல் தீா்த்தவாரி, மே1-இல் தெப்பத்திருவிழா ஆகியவை நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறையினா், திருக்கோடிக்காவல், அம்மாபேட்டை கிராமவாசிகள் செய்கின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.