திருவாடானை அருகே திருவெற்றியூா் ஸ்ரீ பாகம்பிரியாள் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திருவெற்றியூரில் சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்துக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வல்மிகநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் நாள்தோறும் சுவாமி, அம்மன் அன்ன வாகனம், வெட்டு குதிரை, காமதேனு வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 25-ஆம் தேதியும், 29-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறும்.
விழா நாள்களில் இரவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான நிா்வாகமும், கிராம பொதுமக்களும் செய்து வருகின்றனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சின்னமனூரில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றம்

கொடுமுடி மகுடேஸ்வரா், வீரநாராயணப் பெருமாள் கோயில்களில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

திருஒற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!

சங்கரநாராயண சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


