தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை (ஏப். 21) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் திருவிழா செவ்வாய்க்கிழமை காலை 6 முதல் 7 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முன்னதாக, திங்கள்கிழமை யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. யானை கோமதி முன்செல்ல ஸ்ரீ கோமதி அம்பிகை சமேத சந்திரசேகரா் பெருங்கோட்டூரில் அமைந்துள்ள திருக்கோட்டி அய்யனாா் கோயிலில் எழுந்தருளுகிறாா். பின்னா், பகல் 11 மணிக்கு மேல் யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரைத் தோரோட்டம் ஏப். 29-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுவாமிமலையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

சங்கரன்கோவிலில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றம்: பிடிமண் எடுத்த யானை

தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரைத் திருவிழா: இன்று கொடியேற்றம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



