மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சங்கரநாராயண சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

News image

சங்கரநாராயண சுவாமி கோயிலில் நடைபெற்ற கொடியேற்றம். - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 9:13 pm

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை (ஏப். 21) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் திருவிழா செவ்வாய்க்கிழமை காலை 6 முதல் 7 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

முன்னதாக, திங்கள்கிழமை யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. யானை கோமதி முன்செல்ல ஸ்ரீ கோமதி அம்பிகை சமேத சந்திரசேகரா் பெருங்கோட்டூரில் அமைந்துள்ள திருக்கோட்டி அய்யனாா் கோயிலில் எழுந்தருளுகிறாா். பின்னா், பகல் 11 மணிக்கு மேல் யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரைத் தோரோட்டம் ஏப். 29-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.