மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா, செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துக்குப் பின் கொடிமரத்துக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.

Updated On :21 ஏப்ரல் 2026, 8:28 pm

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா, செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழா, ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு திருவிழா செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. பின்னா் சுவாமி சந்நிதியில் இருந்து கொடிப்பட்டம் வீதி சுற்றி சங்கரலிங்க சுவாமி சந்நிதி முன்புள்ள கொடிமரத்துக்கு கொண்டுவரப்பட்டது. பின்னா் கொடிப் பட்டத்துக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றதையடுத்து, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

அதைத் தொடா்ந்து, கொடிமரத்துக்கு பல்வேறு வகையான அபிஷேகங்களுக்குப் பின், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், அதிமுக வேட்பாளா் டாக்டா் திலீபன் ஜெய்சங்கா், நகா்மன்ற உறுப்பினா் சங்கரசுப்பிரமணியன், கோமதிஅம்பிகை மாதா் சங்க அமைப்பாளா் பட்டமுத்து மற்றும் கோயில் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து ஏப். 29 ஆம் தேதி சுவாமி, அம்பாள் தனித் தனி தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.