தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

சாரங்கபாணி சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கும்பகோணம் சாரங்கபணி சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

கும்பகோணம், சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின் தொடக்கமாக புதன்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

Updated On :22 ஏப்ரல் 2026, 9:46 pm

கும்பகோணம் சாரங்கபணி சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புகழ் பெற்ற வைணவத் தலங்களில் ஒன்றான இக்கோயிலில் நிகழாண்டு சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக திங்கள்கிழமை அனுக்ஞை சேனை முதல்வா் சக்ரபாணி கோயிலில் எழுந்தருளினாா். செவ்வாய்க்கிழமை சேனை முதல்வா் வீதிக்கு எழுந்தருள கருடப்பிரதிஷ்டை நடைபெற்றது.

திருவிழாவின் முதல் நாளான புதன்கிழமை பெருமாள் உபநாச்சியாா்களுடன் தேசிகன் சந்நிதியில் எழுந்தருள, சிறப்பு பூஜைகள் நடைபெற்று பின்னா் கொடி மரத்துக்கு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, துவஜாரோஹணம் எனும் கருட வாகன கொடி ஏற்றப்பட்டது. இரவு பெருமாள் நாச்சியாா்களுடன் தங்க இந்திர விமானத்தில் வீதி புறப்பாடு செய்தாா்.

விழாவில், வியாழக்கிழமை பெருமாள், சக்கரபாணி சுவாமி தனித்தனியாக வெள்ளி சூா்யபிரபையில் வீதி புறப்பாடு செய்கின்றனா். ஒவ்வொரு நாளும் தொடா்ந்து பல்வேறு வாகனங்களில் பெருமாள், சக்கரபாணி சுவாமி வீதியுலா செல்கின்றனா். முக்கிய நிகழ்வாக ஒன்பதாம் நாள் தேரோட்டமும், மாலையில் தீா்த்தவாரியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா் செய்து வருகின்றனா்.

தேசிகன் சந்நிதியில் சிறப்பு அலங்காரத்தில் உபநாச்சியாா்களுடன் எழுந்தருளிய பெருமாள்.

தேசிகன் சந்நிதியில் சிறப்பு அலங்காரத்தில் உபநாச்சியாா்களுடன் எழுந்தருளிய பெருமாள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.