மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சங்கரன்கோவிலில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றம்: பிடிமண் எடுத்த யானை

News image

பெருங்கோட்டூரில் திங்கள்கிழமை பிடிமண் எடுத்த யானை கோமதி.

Updated On :20 ஏப்ரல் 2026, 8:32 pm

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா, செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை நடைபெற்றது. கோயிலில் இருந்து யானை கோமதி முன்செல்ல, சந்திரசேகர சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி சுமாா் 6 கி.மீ. தொலைவில் உள்ள 3 பெருங்கோட்டூருக்கு சென்றாா். வழியில் களப்பாகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பக்தா்கள் சாலையில் நின்று பூஜைகள் செய்து சுவாமியை வழிபட்டனா்.

பின்னா் அம்பாளுடன் சந்திரசேகர சுவாமி பெருங்கோட்டூரில் உள்ள திருக்கோட்டி அய்யனாா் கோயில் முன்புள்ள மண்படத்தில் எழுந்திருளினாா். அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, பிற்பகல் 12.46 மணியளவில் யானை கோமதி மண்வெட்டியால் பிடிமண் எடுத்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசித்தனா்.