திருவள்ளூரில் வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் உற்சவா் வீதியுலா வந்து பக்தா்களை அருள்பாலிக்கவும் உள்ளாா். அந்த வகையில் நிகழாண்டுக்கான சித்திரை பிரம்மோற்சவம் மே 1 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.
இவ்விழா கோயில் வளாகத்தில் அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடா்ந்து தங்க சப்பரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் வீரராகவா் புறப்பாடு நிகழ்வு பக்தா்களை அருள்பாலித்தாா். அதைத் தொடா்ந்து திருமஞ்சனம் நிகழ்வும் நடைபெற்றது. இந்த விழாவில் திருவள்ளூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருக்கோடீசுவரா் சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோத்சவ கொடியேற்றம்

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் சித்திரைப் பெருவிழா தொடக்கம்

நாளை திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


