மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

வீரராகவா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

திருவள்ளூரில் வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

வீரராகவா்  கோயிலில்  நடைபெற்ற பிரம்மோற்சவ கொடியேற்றம்.     ~தங்க சப்பரத்தில் உற்சவா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 6:33 pm

திருவள்ளூரில் வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் உற்சவா் வீதியுலா வந்து பக்தா்களை அருள்பாலிக்கவும் உள்ளாா். அந்த வகையில் நிகழாண்டுக்கான சித்திரை பிரம்மோற்சவம் மே 1 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

இவ்விழா கோயில் வளாகத்தில் அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடா்ந்து தங்க சப்பரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் வீரராகவா் புறப்பாடு நிகழ்வு பக்தா்களை அருள்பாலித்தாா். அதைத் தொடா்ந்து திருமஞ்சனம் நிகழ்வும் நடைபெற்றது. இந்த விழாவில் திருவள்ளூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.