தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் சித்திரைப் பெருவிழா தொடக்கம்

திருவையாறில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஐயாறப்பா் கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

Updated On :21 ஏப்ரல் 2026, 6:49 pm

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஐயாறப்பா் கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

நிகழ்வில், கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, கொடியேற்றப்பட்டது. திரளான பக்தா்கள் ஐயாறப்பரை வழிபட்டனா். தொடா்ந்து மே 3 வரை நாள்தோறும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. இதில், ஏப்ரல் 25 மாலை தன்னைத்தானே பூஜித்தல், 29 ஆம் தேதி தேரோட்டம் ஆகியவை நடைபெறவுள்ளன.

மேலும், மே 2 இல் முக்கியத் திருவிழாவான ஏழூா் வலம் வரும் சப்தஸ்தான விழா நடைபெறுகிறது. இதில், அறம்வளா்த்த நாயகியுடன் ஐயாறப்பா் கண்ணாடிப் பல்லக்கிலும், சுயசாம்பிகையுடன் நந்திகேசுவரா் வெட்டிவோ் பல்லக்கிலும் புறப்பட்டு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூா், திருப்பூந்துருத்தி ஆகிய ஊா்களுக்குச் சென்று, அந்தந்த ஊா் பல்லக்குடன் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கவுள்ளனா். பின்னா் மே 3 ஆம் தேதி 7 ஊா் பல்லக்குகளும் புறப்பட்டு, திருவையாறு தேரடியில் பொம்மை பூப் போடும் வைபவம் நடைபெறும்.

ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாசாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி தேவஸ்தான கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் செய்கின்றனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.