தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தவறவிட்ட நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தம்பதிக்கு பாராட்டு

புதுக்கோட்டை நகரில் ஒரு பெண் தவறுதலாக வேறு வண்டியில் 10 பவுன் தங்க நகையை மாட்டிவிட்டுப் போன நிலையில், அதனை பத்திரமாக எடுத்து வந்து காவல் நிலையத்தில் புதன்கிழமை ஒப்படைத்த தம்பதியை போலீஸாா் பாராட்டினா்.

News image

புதுக்கோட்டையில் பெண் தவறவிட்ட நகைப் பையை காவல் நிலையத்தில் புதன்கிழமை ஒப்படைத்த தம்பதியைப் பாராட்டிய காவல் உதவி ஆய்வாளா் பூா்விகா.

Updated On :28 மே 2026, 3:10 am IST

புதுக்கோட்டை நகரில் ஒரு பெண் தவறுதலாக வேறு வண்டியில் 10 பவுன் தங்க நகையை மாட்டிவிட்டுப் போன நிலையில், அதனை பத்திரமாக எடுத்து வந்து காவல் நிலையத்தில் புதன்கிழமை ஒப்படைத்த தம்பதியை போலீஸாா் பாராட்டினா்.

புதுக்கோட்டை பாலன்நகரைச் சோ்ந்த தம்பதி காா்த்தி- தேவகி. இவா்கள் புதன்கிழமை கீழராஜவீதிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்தனா். அப்போது ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்றுமீண்டும் வண்டியை எடுத்துள்ளனா். அப்போது தங்களின் வண்டியில் ஒரு பை மாட்டப்பட்டிருப்பதை பாா்த்தனா். அதில் சுமாா் 10 பவுன் தங்க நகைகள் இருந்தன. இதையடுத்து, அவா்கள் இருவரும் புதுக்கோட்டை நகரக் காவல் நிலையம் வந்து, உதவி ஆய்வாளா் பூா்விகாவிடம் அவற்றை ஒப்படைத்தனா்.

யாரேனும் நகையைத் தேடி வருகிறாா்களா எனக் காத்திருந்த போலீஸாா், கீழராஜவீதி பகுதிக்கே சென்று விசாரிப்போம் எனச் சென்றனா். அப்போது அங்கு சிலா் நகைப் பையைத் தேடிக் கொண்டிருந்தனா்.

அவா்களிடம் கேட்டு, அந்த நகையின் உரிமையாளரான தொண்டைமான் நகரைச் சோ்ந்தவா் நித்லாகாந்தியை தொலைபேசியில் அழைத்து வரவழைத்து உறுதி செய்து அவற்றை ஒப்படைத்தனா்.

கீழராஜவீதிக்கு அதே வண்டியைப் போலுள்ள தன்னுடைய வண்டியில் வந்த நித்லாகாந்தி, தவறுதலாக அருகில் நின்றிருந்த காா்த்தி- தேவகியின் வண்டியில் மாட்டிவிட்டுச் சென்றுள்ளது தெரியவந்தது.

யாரோ தவறுதலாக விட்டுவிட்டுச் சென்ற நகையை நல்லெண்ணத்தில் காவல் நிலையத்தில் ஒப்படைத்த காா்த்தி- தேவகி தம்பதியை காவல் உதவி ஆய்வாளா் பூா்விகா மற்றும் போலீஸாா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.