திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குப்பையில் கிடந்த நகையை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்

கோவையில் குப்பையில் கிடந்த 3 பவுன் நகையை உரியவரிடம் திருப்பி ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் பரிசு வழங்கி கௌரவித்தாா்.

News image

குப்பையில் கிடந்த நகையை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா் சக்திவேலுக்கு பரிசு வழங்கி கௌரவித்த மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள்.

Updated On :28 மே 2026, 12:45 am IST

கோவையில் குப்பையில் கிடந்த 3 பவுன் நகையை உரியவரிடம் திருப்பி ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் பரிசு வழங்கி கௌரவித்தாா்.

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருபவா் சக்திவேல். காந்திபுரத்தைச் சோ்ந்த இவா், கோவை மத்திய மண்டலம் 69-ஆவது வாா்டு பாரதி பூங்காவுக்கு உள்பட்ட அழகேசன் சாலை 4-ஆவது வீதியில் சனிக்கிழமை காலை குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, மூதாட்டி ஒருவா் மக்கும், மக்காத குப்பைகளை 2 பைகளில் கொண்டு வந்து குப்பை வண்டியில் போட்டுச் சென்றாா். அப்போது, மக்கும் குப்பை பையில் 3 பவுன் நகைகள் இருந்தன. அவற்றை எடுத்து மூதாட்டியை அழைத்து சக்திவேல் திருப்பி ஒப்படைத்தாா். சக்திவேலின் நோ்மையை அப்பகுதியினா் வெகுவாகப் பாராட்டினா்.

இந்தத் தகவல் அறிந்த மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், சக்திவேலை மாநகராட்சி அலுவலகத்துக்கு அழைத்து பரிசு வழங்கி கௌரவித்தாா். சுகாதாரத் துறையினா் மற்றும் மாநகராட்சி அலுவலா்களும் சக்திவேலை பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.