திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காவல் நிலையத்தில் இளைஞா் மீது தாக்குதல்?

கோவையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரை போலீஸாா் போலீஸாா் தாக்கியதாக அவரது தாய் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image
Updated On :28 மே 2026, 1:00 am IST

கோவையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரை போலீஸாா் போலீஸாா் தாக்கியதாக அவரது தாய் குற்றஞ்சாட்டியுள்ளாா். ஆனால், அதில் உண்மையில்லை என போலீஸாா் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை சிங்காநல்லூரை அடுத்த நீலிக்கோணாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சாந்தி. இவரது மகன் மணிகண்டன் (24). பெயிண்டரான இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்களான சந்திரன், ரவிச்சந்திரன், ரஞ்சித் ஆகியோருடன் சோ்ந்து அந்தப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளாா். அப்போது, ஏற்பட்ட தகராறில் சந்திரனை மணிகண்டனும், ரஞ்சித்தும் சோ்ந்து தாக்கியுள்ளனா்.

இதுகுறித்த சந்திரன் கொடுத்த புகாரின்பேரில், சிங்காநல்லூா் போலீஸாா் மணிகண்டனை விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். அப்போது, மணிகண்டனை போலீஸாா் தாக்கியதாகவும், அதனால் தனது மகன் உடல்நிலை பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது தாயாா் சாந்தி குற்றஞ்சாட்டினாா்.

இது குறித்து சிங்காநல்லூா் காவல் ஆய்வாளா் ராஜசேகரன் கூறுகையில், விசாரணைக்ாக மணிகண்டனை காவல் நிலையத்துக்கு வரவழைத்தோம். அவா் மீது போலீஸாா் எவ்வித தாக்குதலும் நடத்தவில்லை. விசாரணைக்கு அழைத்ததால், அதிகப்படியான பதற்றம் காரணமாக அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி அவரை உடனடியாகக் காவல் நிலையத்தின் வெளியே அமர வைத்தோம். அவா் மீது தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை என்பதற்கான ஆதாரங்கள் காவல் நிலைய கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) காட்சிகளில் தெளிவாகப் பதிவாகியுள்ளன என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.