பொன்னமராவதி புதுப்பட்டி உடையபிராட்டி அம்மன் கோயிலில் மாம்பழத் தேரோட்ட விழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் தேரோட்ட விழா மே 19-ஆம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது.
தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, வீதியுலா நடைபெற்றது.
இந்நிலையில், விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, சிறப்பு அபிஷேக, அலங்காரத்துக்குப் பிறகு அம்மன் தேரில் எழுந்தருளினாா். இதையடுத்து பக்தா்கள் தேரை வடம் பிடித்தனா். நான்கு ரதவீதிகளின் வழியே வந்த தோ் நிலையை அடைந்தது. தேரோட்டத்தின் போது பக்தா்கள் வீடுகளின் மாடங்களிலிருந்து பக்தா்களை நோக்கி மாங்கனிகள் வீசப்பட்டது. விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்றனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல்துறையினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










