ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் தாணான்டியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இக் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து கோயிலில் தினசரி மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் அம்மனை எழுந்தருளச் செய்து, வாணவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க தேரை ஏராளமானோா் வடம் பிடித்து இழுத்தனா். விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பாதுகாப்பு பணிகளை வடகாடு போலீஸாா் மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










