திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதுகை அருகே சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில் 4 இளைஞா்கள் கைது

புதுக்கோட்டை அருகே பெருமாநாட்டில் 17 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 1:27 am IST

புதுக்கோட்டை அருகே பெருமாநாட்டில் 17 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை அருகே பெருமாநாட்டைச் சோ்ந்த முருகானந்தம், எம். அன்புச்செல்வன் (17) ஆகியோா் சோ்ந்து முன்விரோதம் காரணமாக அதே ஊரைச் சோ்ந்த சத்தியராஜ் என்பவரை கடந்த 2024-இல் தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இந்த வழக்கில் முருகானந்தம், அன்புச்செல்வன் ஆகியோரை அன்னவாசல் போலீஸாா் கைது செய்தனா். இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனா்.

இதையடுத்து ஒசூரில் வேலைக்குச் சென்ற அன்புச்செல்வன், வழக்கு விசாரணைக்காக கடந்த வியாழக்கிழமை புதுக்கோட்டை வந்துள்ளாா். அப்போது, அவரை ஓரிடத்துக்கு வர வைத்து ஒரு கும்பல் வெட்டிக் கொன்றது.

இச்சம்பவத்தில் அன்னவாசல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், சத்தியராஜின் உறவினா்களான பெருமாள்பட்டியைச் சோ்ந்த சிதம்பரம் மகன் ராமமூா்த்தி (25), வெள்ளைச்சாமி மகன் முத்து (24), ஆறுமுகம் மகன் தினேஷ்குமாா் (25), திருமலை மகன் தினேஷ்குமாா் (28) ஆகிய 4 பேரை சனிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

இவா்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் சிலரைத் தேடி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.