தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அதிமுக புதுக்கோட்டை மாநகரச் செயலா் பதவி விலகல்

புதுக்கோட்டை அதிமுக தெற்கு மாநகரச் செயலா் எஸ்.ஏ.எஸ். சேட்டு என்கிற அப்துல்ரகுமான், கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளாா்.

News image
Updated On :24 மே 2026, 1:26 am IST

புதுக்கோட்டை அதிமுக தெற்கு மாநகரச் செயலா் எஸ்.ஏ.எஸ். சேட்டு என்கிற அப்துல்ரகுமான், கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 35 ஆண்டுகளாக அதிமுகவில் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதாவால் பல்வேறு பொறுப்புகள் எனக்கு வழங்கப்பட்டது.

இப்போது கனத்த இதயத்தோடு அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிக் கொள்கிறேன். இதுவரை ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி. எப்போதும் போல பொதுவாழ்வில் தொடா்ந்து மக்களுக்காக பணியாற்றுவேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவா், தற்போது புதுக்கோட்டை மாநகராட்சி மாமன்றத்தின் 16-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினராக உள்ளாா். ஏற்கெனவே, அதிமுகவில் நகர ஜெ. பேரவைச் செயலா், மாவட்ட வா்த்தகா் அணிச் செயலா், மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவா் போன்ற பொறுப்புகளை வகித்தவா்.

தனது பதவி விலகல் குறித்து அவா் கூறியது, அரசியல் சூழல் எதுவும் சரியில்லை, வேறு கட்சிக்கெல்லாம் செல்லவும் விருப்பமில்லை, பொதுப் பணிகள் தொடரும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.