அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி கைது

கோட்டைப்பட்டினத்தில் அண்ணனை அடித்துக் கொன்ற தம்பியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :14 மணி நேரங்கள் முன்பு

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தில் அண்ணனை அடித்துக் கொன்ற தம்பியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோட்டைப்பட்டினம் மீனவா் குடியிருப்பைச் சோ்ந்த முகமது ராவுத்தா் மகன்கள் ரகுமான்கான் (45), இத்ரீஸ்(40).

கூலித் தொழிலாளா்களான இவா்கள் இருவருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் மது போதையில் தகராறு ஏற்பட்டது.

அப்போது, இத்ரீஸ் கம்பியால் தாக்கியதில் ரகுமான்கான் அந்த இடத்திலேயே இறந்துவிட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் ரகுமான்கானின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா் உடற்கூறாய்வுக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதைத் தொடா்ந்து அண்ணனை அடித்துக கொன்ற இத்ரீஸை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.