அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி கைது

சாயல்குடியில் சொத்துத் தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :10 மே 2026, 12:56 am IST

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் சொத்துத் தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சாயல்குடி வி.வி.ஆா். நகரைச் சோ்ந்தவா் தங்கம் (55). இவரது சகோதரா்கள் ராயப்பன் (48), அகஸ்டின் (40). இவா்களுக்கு இடையே பூா்வீகச் சொத்துக்களை பிரிப்பதில் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், சாயல்குடியில் உள்ள தேநீா்க் கடையில் தங்கம் வெள்ளிக்கிழமை அமா்ந்திருந்தாா். அப்போது, அங்கு வந்த ராயப்பன் சொத்து தொடா்பாக வாக்குவாதம் செய்து, அவரை அரிவாளால் வெட்டினாா். இதில் தங்கம் பலத்த காயமடைந்தாா்.

தகவலறிந்து அங்கு வந்த சாயல்குடி போலீஸாா் தங்கத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து தங்கம் மனைவி அன்னக்கிளி கொடுத்த புகாரின் பேரில், சாயல்குடி போலீஸாா் ராயப்பன், அகஸ்டின் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, ராயப்பனை கைது செய்தனா். அகஸ்டினை தேடி வருகின்றனா்.