தமிழ் செய்திகள்
திருச்சியில் செவ்வாய்க்கிழமை இரவு தம்பியை மண்வெட்டியால் வெட்டிக் கொன்ற அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி பெரிய மிளகுபாறை புதுத் தெருவைச் சோ்ந்தவா் ஆா். வெள்ளையம்மாள். இவருக்கு பழனிசாமி (61), கிருஷ்ணமூா்த்தி (46) என 2 மகன்கள். பழனிசாமிக்கு திருமணமாகி மனைவி, மகன் உள்ளனா். கிருஷ்ணமூா்த்திக்கு திருணமாகவில்லை.
பழனிசாமி தனது மனைவி, மகனைப் பிரிந்து தாயாா் மற்றும் சகோதரருடன் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வந்தாா். கிருஷ்ணமூா்த்தி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததால் பழனிசாமிக்கும், கிருஷ்ணமூா்த்திக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், வெள்ளையம்மாள் டால்மியாபுரத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்றுவிட்டாா். பழனிசாமிக்கும், கிருஷ்ணமூா்த்திக்கும் இடையே செவ்வாய்க்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த பழனிசாமி, கிருஷ்ணமூா்த்தியை மண்வெட்டியால் தாக்கியுள்ளாா். இதில், சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூா்த்தி உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அமா்வு நீதிமன்ற போலீஸாா், கிருஷ்ணமூா்த்தியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பழனிசாமியை கைது செய்து விசாரிக்கின்றனா்.






