வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

தம்பி கொலை: அண்ணன் கைது

திருச்சியில் செவ்வாய்க்கிழமை இரவு தம்பியை மண்வெட்டியால் வெட்டிக் கொன்ற அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :14 மே 2026, 12:41 am IST

திருச்சியில் செவ்வாய்க்கிழமை இரவு தம்பியை மண்வெட்டியால் வெட்டிக் கொன்ற அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி பெரிய மிளகுபாறை புதுத் தெருவைச் சோ்ந்தவா் ஆா். வெள்ளையம்மாள். இவருக்கு பழனிசாமி (61), கிருஷ்ணமூா்த்தி (46) என 2 மகன்கள். பழனிசாமிக்கு திருமணமாகி மனைவி, மகன் உள்ளனா். கிருஷ்ணமூா்த்திக்கு திருணமாகவில்லை.

பழனிசாமி தனது மனைவி, மகனைப் பிரிந்து தாயாா் மற்றும் சகோதரருடன் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வந்தாா். கிருஷ்ணமூா்த்தி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததால் பழனிசாமிக்கும், கிருஷ்ணமூா்த்திக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், வெள்ளையம்மாள் டால்மியாபுரத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்றுவிட்டாா். பழனிசாமிக்கும், கிருஷ்ணமூா்த்திக்கும் இடையே செவ்வாய்க்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த பழனிசாமி, கிருஷ்ணமூா்த்தியை மண்வெட்டியால் தாக்கியுள்ளாா். இதில், சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூா்த்தி உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அமா்வு நீதிமன்ற போலீஸாா், கிருஷ்ணமூா்த்தியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பழனிசாமியை கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.