தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதுகையில் மக்கள் குறைகேட்பு முகாம்: 511 மனுக்கள் அளிப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 511 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா்.

News image

மக்கள் குறைகேட்பு மனுக்கள் மீதும் முறையாக நடவடிக்கை மேற்கொண்ட கறம்பக்குடி வட்டாட்சியா் பிரவீனா மேரிக்கு பாராட்டுக் கோப்பையை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

Updated On :2 ஜூன் 2026, 2:32 am IST

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 511 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா்.

நிகழ்வில் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் வேலூரில் அண்மையில் நடைபெற்ற யுவ ஆப்தமித்ரா என்ற பேரிடா் மேலாண்மை நண்பா்களாகத் தோ்வு செய்யப்பட்டு பயிற்சி பெற்று திரும்பிய 10 திட்டப் பயிற்றுநா்களும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியரிடம் காட்டி வாழ்த்து பெற்றனா்.

மக்கள் குறைகேட்பு நாள் கூட்டங்களின்போது பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கு சரியான முறையில் தீா்வுகண்ட கறம்பக்குடி வட்டாட்சியா் பிரவீனா மேரிக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா கேடயம் வழங்கிப் பாராட்டினாா்.

முன்னாள் படைவீரா் நலனுக்காக கடந்த 2023ஆம் ஆண்டின் கொடிநாள் வசூலின்போது, ரூ. 1.83 கோடி வரை வசூலித்து சாதனை படைத்ததற்காக புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வரப்பெற்ற ஆளுநரின் பாராட்டுக் கடிதத்தை முன்னாள் படைவீரா் நலத் துறை அலுவலா்கள் ஆட்சியரிடம் அளித்தனா்.

குறைகேட்பு நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கே. முத்துச்சாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.