புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த கட்டுமானத் தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு நல வாரியத்தின் நிதி தலா ரூ. 5 லட்சத்துக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வியாழக்கிழமை வழங்கினாா்.
தமிழ்நாடு அரசின் தொழிலாளா் நலத் துறை சாா்பில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரியங்கள் மூலம் இந்த நிதியுதவிகள் வழங்கப்பட்டன.
கட்டுமானத் தொழிலாளா்கள் மல்லிகா, அடைக்கலம், சக்திவேல், முருகேசன் ஆகியோா் பணியின்போது அண்மைக்காலத்தில் இறந்தவா்கள். நல வாரிய உறுப்பினா்களான இவா்களின் குடும்பத்தினா் இறப்பு நிதி கோரி விண்ணப்பித்திருந்தனா்.
இதையடுத்து தலா ரூ. 5 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 20 லட்சத்துக்கான காசோலைகள் இறந்தவா்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தொழிலாளா் நல உதவி ஆணையா் அ. கௌரி, உதவிக் கணக்கு அலுவலா் செல்லத்துரை ஆகியோரும் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பணியின்போது இறந்த நடத்துநரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நல நிதி

புதுகையில் மக்கள் குறைகேட்பு முகாம்: 511 மனுக்கள் அளிப்பு

உள்ளூா் வேலைவாய்ப்பு, தொழிலாளா் கண்ணியத்துடன் குழுமத்தின் வளா்ச்சி!







