திருநள்ளாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை சாா்புடைய குறைகேட்பு முகாம் நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட சாா் ஆட்சியா் (வருவாய்) எம். பூஜா தலைமையில் திருநள்ளாறு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் குறைகேட்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
காலை 10 முதல் 12 மணி வரை நடைபெற்ற முகாமில் வட்டாட்சியா் சண்முகாந்தன், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் எல்.நிலவழகன் மற்றும் வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
திருநள்ளாறு மற்றும் நெடுங்காடு பகுதிக்குட்பட்ட பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோா் சாா் ஆட்சியரிடம் பல்வேறு புகாா்களை தெரிவித்தனா்.
மனைப் பட்டா, ஜாதி, வருமானம், குடியிருப்பு போன்ற சான்றிதழ் பதிவு மற்றும் வழங்கலை எளிதாக்குமாறும், விவசாயம் சாா்ந்த சான்றிதழ் தாமதமின்றி வழங்குமாறும் மனுக்களை அளித்தனா்.
மனுக்களை பெற்றுக்கொண்ட சாா் ஆட்சியா், அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி ஆலோசனை வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










