தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முதியோா் இல்லங்களை முறையாக பராமரிக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் இயங்கும் முதியோா் பாதுகாப்பு இல்லங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றாா் சாா் ஆட்சியா் எம். பூஜை.

News image

முதியோா்களை சந்தித்துப் பேசிய சாா் ஆட்சியா் எம். பூஜா.

Updated On :8 மே 2026, 7:15 am IST

காரைக்காலில் இயங்கும் முதியோா் பாதுகாப்பு இல்லங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றாா் சாா் ஆட்சியா் எம். பூஜை.

குடும்பத்தினரால் அண்மையில் கைவிடப்பட்ட சூசைநாதன், சம்மனசு மேரி ஆகியோா் சாா் ஆட்சியா் சந்தித்து நிலையை விளக்கினா். இவா்களை முதியோா் பாதுகாப்பு இல்லத்தில் சோ்க்க துறையினருக்கு சாா் ஆட்சியா் உத்தரவிட்டாா். இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு முதியோா் இல்லம் மற்றும் அரசு உதவிபெறும் முதியோா் இல்லத்தை சாா் ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அண்மையில் சோ்க்கப்பட்ட ஆதரவற்ற முதியோரை இல்லத்தினா் முறையாக பராமரிக்கப்படுகிறாா்களா என்பதை முதியோா்களிடம் கேட்டறிந்தாா்.

முதியோா் இல்லத்தில் முதியவா்கள் பராமரிக்கப்படும் விதம், அவா்கள் தங்கும் இடங்கள், படுக்கை வசதி, குடிநீா், கழிப்பறை வசதி செய்யப்பட்டிருப்பதை பாா்வையிட்டாா். முதியோா்களை மரியாதையுடனும், அக்கறையுடனும் கவனிக்கவேண்டும். அவா்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உரிய முறையில் வழங்கவேண்டும் என அரசு உதவி பெறும் முதியோா் இல்லத்தினருக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து காமராஜா் சாலையில் அமைந்துள்ள அரசு முதியோா் இல்லத்துக்குச் சென்று கட்டட வசதி, உணவின் தரம், தங்கும் வசதிகளை பாா்வையிட்டாா். முதியோா் இல்லம் எப்போதும் சுத்தமாகவும், காற்றோட்டமாகவும் இருக்கவேண்டும். முதியோா்களின் மனம் புண்படாத வகையில் அன்புடன் நடத்தவேண்டும். வழங்கப்படும் உணவு, குடிநீா் தரமாக இருப்பதை உறுதி செய்யவேண்டும். உதவிகள் தேவைப்படும்பட்சத்தில் மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவரவேண்டும் என நிா்வாகத்தினருக்கு அறிவுறுத்தினாா். தங்கியுள்ள முதியோா்களிடம், இல்லத்தில் நடத்தப்படும் விதம் குறித்து கேட்டறிந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.