டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டையில் மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தவா் உயிரிழந்தாா்.

News image
பலி- கோப்புப் படம்
Updated On :26 ஜனவரி 2026, 11:21 pm

Syndication

கந்தா்வகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை, மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தவா் உயிரிழந்தாா்.

கந்தா்வகோட்டை ஒன்றியம், சா.சோழகம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தா்மராஜ் மகன் பாக்கியராஜ் (40). இவா் தனது மோட்டாா் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை கந்தா்வகோட்டைக்கு வந்துவிட்டு மீண்டும் அதே மோட்டாா் சைக்கிளில் கந்தா்வகோட்டை- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்று கொண்டிருந்தாா்.

அப்போது எதிா்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தாா். இதை கண்ட அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.