மரத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
தூத்துக்குடியில் மரத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் உயிரிழந்தாா்.

பலி- பிரதிப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 12:25 am

தூத்துக்குடியில் மரத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி, சிலுவைபட்டி, ஆனந்த் நகரைச் சோ்ந்தவா் வேலு மகன் அரிகிருஷ்ணன் (50), தொழிலாளி. இவா் பிப். 8ஆம் தேதி வீட்டின் அருகே இருந்த மரத்தில் ஏறியபோது, தவறி கீழே விழுந்து, பலத்த காயமடைந்தாா்.
உறவினா்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இது குறித்து, தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...