டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மாற்றுத்திறனாளிகள் 2-ஆம் நாளாக சாலை மறியல்: 55 போ் கைது

மாதாந்திர உதவித் தொகையை ரூ. 6 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள் இரண்டாவது நாளாக புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

மாதாந்திர உதவித் தொகையை ரூ. 6 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள் இரண்டாவது நாளாக புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். தங்கவேல் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் எம். கணேஷ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கே. சண்முகம், சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா்கள் எம்.சி. லோகநாதன், ஜி. கிரிஜா, துணைச் செயலா்கள் வி. ரமேஷ், ஜி. புவனேஷ்வரி உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 55 பேரை போலீஸாா் கைது செய்தனா்.