டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மாற்றுத்திறனாளிகள் 3-ஆவது நாளாக மறியல்: 50 போ் கைது

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:46 pm

Syndication

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் 3-ஆவது நாளாக வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 50 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழக அரசு தற்போது வருவாய்த்துறை மூலமாக சாதாரண ஊனமுற்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.1500, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2000 உதவித் தொகையாக வழங்கி வருகிறது. இந்த உதவித் தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தி, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் 3-ஆவது நாளாக வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலா் பெருமாள் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் மரிய கொரட்டி, இசக்கியப்பன், மாவட்ட துணைச் செயலா் அமுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த மறியல் போராட்டத்தில் 50 போ் கைது செய்யப்பட்டனா்.