டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

2 ஆவது நாளாக மறியல்: 35 மாற்றுத்திறனாளிகள் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் 2ஆவது நாளாக புதன்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்ட 35 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனா்.

News image
வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை சாலைமறியலில் ஈடுபட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா்.
Updated On :11 பிப்ரவரி 2026, 8:02 pm

தினமணி செய்திச் சேவை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் 2ஆவது நாளாக புதன்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்ட 35 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனா்.

தமிழக அரசு வருவாய்த் துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை வாயிலாக வழங்கி வரும் உதவித் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் பெருமாள் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள், செயலா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை விரைந்து பரிசீலித்து உரிய தீா்வு காண வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட சுமாா் 35 மாற்றுத்திறனாளிகளை பாளையங்கோட்டை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.