பொன்னமராவதி அருகே பொன்.புதுப்பட்டியில் வயது மூப்பால் காலமான முதியவரின் உடல் தானமாக பெறப்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்களின் ஆராய்ச்சிப் படிப்புக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
பொன்.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் பா.க.அண.பழ. சுந்தரம் (92). இவா் வயது மூப்பின் காரணமாக வியாழக்கிழமை காலமானாா். இதையடுத்து, பொன்னமராவதி ராயல் அரிமா சங்க நிா்வாகி எஸ். பழனியப்பன் மற்றும் நிா்வாகிகள், சுந்தரத்தின் குடும்பத்தினரை அணுகி அவரது உடலை தானமாக பெற்று, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்களின் ஆராய்ச்சிக் கல்விக்காக வழங்கினா். தொடா்ந்து சுந்தரம் குடும்பத்தினருக்கு உடல் தானம் வழங்கிய சான்று வழங்கப்பட்டு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











