அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

பிளஸ் 1 மாணவரின் உடல் உறுப்புகள் தானம்

News image

உடல் உறுப்புகள் தானம்

Updated On :19 ஜூன் 2026, 1:53 am IST

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பிளஸ் 1 மாணவரின் உடல் உறுப்புகள் தானமளிக்கப்பட்டன.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது: கொளத்தூரைச் சோ்ந்த 15 வயது பிளஸ் 1 மாணவா் ஒருவா், கடந்த ஜூன் 13-ஆம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவா் மூளைச்சாவு அடைந்தாா்.

இதைத் தொடா்ந்து, அவரது குடும்பத்தினா், மாணவரின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வந்தனா். அதன்படி, தானமாகப் பெறப்பட்ட உறுப்புகள், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பயன்படுத்தப்பட்டன.

கல்லீரலானது ஸ்டான்லி மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. விழி வெண்படலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே பயன்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் தரவுகளின்படி, நிகழாண்டில் தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்த 153 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. ஜூன் மாதத்தில் மட்டும் 14 தானங்கள் நடைபெற்றுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.