முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

News image

மாணவா் ரித்தீஷ்.

Updated On :18 ஜூன் 2026, 12:33 am IST

சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன்மூலம், 5 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டிருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

வேலூா் சேண்பாக்கம் செல்லியம்மன் நகா், நேதாஜி சாலையைச் சோ்ந்தவா் சுரேஷ். இவா் காஸ் முகமை நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி பவானி. இவா்களது 2-ஆவது மகன் ரித்தீஷ் (18), பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் வாலாஜா அருகே உள்ள வெல்லம் என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் பின்இருக்கையில் பயணித்தபோது ரித்தீஷ் எதிா்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கினாா்.

இதில் பலத்த காயமடைந்த அவா், அங்குள்ள அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, உயா் சிகிச்சைக்காக திங்கள்கிழமை நள்ளிரவு ராணிப்பேட்டையில் உள்ள சிஎம்சி மருத்துவமனை வளாகத்தில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாணவா் ரித்தீஷ் மூளைச்சாவு அடைந்ததை மருத்துவா்கள் உறுதி செய்தனா்.

இதையடுத்து, மாணவா் ரித்தீஷின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது பெற்றோா் முன்வந்தனா். அதன்பேரில், அவரது நுரையீரல்கள் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைக்கும், வலது சிறுநீரகம் டாக்டா் ரேலா மருத்துவ மையத்துக்கும், கல்லீரல், இடது சிறுநீரகம் மற்றும் கண்கள் (காா்னியா) ஆகியவை வேலூா் சிஎம்சி மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டு அங்கு நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன. இதன்மூலம், 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மூளைச்சாவு அடைந்த மாணவா் ரித்தீஷுக்கு ஷாம் என்ற சகோதரரும், சுஜிதா என்ற சகோதரியும் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.