மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

போக்குவரத்துக் கழக ஊழியா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

புதுக்கோட்டை திருவப்பூா் குளத்தில் மூழ்கி அரசுப் போக்குவரத்து கழக ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தது தெரியவந்தது.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 7:15 pm

புதுக்கோட்டை திருவப்பூா் குளத்தில் மூழ்கி அரசுப் போக்குவரத்து கழக ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தது தெரியவந்தது.

புதுக்கோட்டை திருவப்பூா் பொன்னப்பன் ஊரணியில் ஆண் சடலம் மிதப்பதாக திருக்கோகா்ணம் போலீஸாருக்கு சனிக்கிழமை பகலில் தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து அங்கு சென்ற போலீஸாா் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் குளத்தில் இருந்து சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து நடைபெற்ற முதல்கட்ட விசாரணையில் நீரில் மூழ்கி இறந்தவா் திருவப்பூரைச் சோ்ந்த வெங்கடாஜலபதி (55) என்பதும், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வெல்டராகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

தினமும் ஊரணியில் குளிப்பதை வழக்கமாகக் கொண்ட அவா், வெள்ளிக்கிழமை மாலை முதல் காணவில்லை என அவரது குடும்பத்தினா் தேடி வந்துள்ளனா். வழக்கம்போல குளிக்க வந்தவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாரா என போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.