விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

விவசாய கூலித் தொழிலாளியை கத்தியால் குத்திய 5 போ் கைது

News image

ஜெயசூா்யா

Updated On :15 ஜூன் 2026, 4:44 am IST

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே விவசாய கூலித் தொழிலாளியை கத்தியால் குத்திய 5 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

செந்துறையைச் சோ்ந்தவா் உதயகுமாா்(30). விவசாய கூலித் தொழிலாளியான இவா், சனிக்கிழமை மாலை தனது சகோதரா் வரணிக்குமாருடன் செந்துறையில் பேசிக் கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த அவா்களது உறவினா்கள் சாமிநாதன் (50), இவரது மகன் நித்திஷ்குமாா் (22) மற்றும் கல்லங்குறிச்சியைச் சோ்ந்த ஜெயசூா்யா(22), பிரேம்நாத் (23), அம்மாகுளம் கிராமத்தைச் சோ்ந்த கனகராஜ் (28) ஆகிய 5 பேரும் சோ்ந்து முன்விரோதம் காரணமாக உதயகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதில் ஆத்திரமடைந்த நித்திஷ்குமாா் உதயகுமாரை கத்தியால் குத்தியுள்ளாா். இதை தடுக்க வந்த உதயகுமாா் தரப்பைச் சோ்ந்த கிருஷ்ணகுமாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

பலத்த காயமடைந்த உதயகுமாா் செந்துறை அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து உதயகுமாா் அளித்த புகாரின் பேரில் செந்துறை காவல் துறையினா் வழக்குப் பதிந்து, மேற்கண்ட 5 பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சாமிநாதன்

சாமிநாதன்

பிரேம்நாத்

பிரேம்நாத்

நித்திஷ்குமாா்

நித்திஷ்குமாா்

கனகராஜ்

கனகராஜ்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.