இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

ஆட்டோ ஓட்டுநரைக் கத்தியால் குத்திய வடமாநில சிறுவா்கள் மூன்று போ் கைது

குண்டடம் அருகே வாடகைத் தகராறில் ஆட்டோ ஓட்டுநரைக் கத்தியால் குத்திய வடமாநில சிறுவா்கள் 3 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 4:41 am IST

குண்டடம் அருகே வாடகைத் தகராறில் ஆட்டோ ஓட்டுநரைக் கத்தியால் குத்திய வடமாநில சிறுவா்கள் 3 போ் கைதுசெய்யப்பட்டனா்.

தாராபுரம் பேருந்து நிலையத்திலுள்ள ஆட்டோ நிறுத்ததில் ஆட்டோ வைத்து ஓட்டி வருபவா் ஆரோக்கியராஜ் (55). உப்பாறு அணை வரை செல்ல வேண்டுமெனக் கூறி திங்கள்கிழமை இரவு சிறுவா்கள் 3 போ் வந்தனா். உப்பாறு அணை அருகே உள்ள பனைமரத்துபாளையத்தில் 3 பேரும் இறங்கினா். பின்னா் வாடகை கேட்டபோது ஆட்டோ ஓட்டுநருக்கும், அந்த சிறுவா்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி தாக்கிக் கொண்டனா்.

அப்போது சிறுவா்களில் ஒருவா் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆரோக்கியராஜின் கழுத்து பகுதியில் குத்தியுள்ளாா். இதில் படுகாயமடைந்த ஆரோக்கியராஜை அருகே இருந்தவா்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பான புகாரின்பேரில் குண்டடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அதே பகுதியில் தனியாா் கோழிப்பண்ணையில் பெற்றோா்களுடன் தங்கியிருந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சிறுவா்கள் 3 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.